Gallery

தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார் அப்புக்குட்டி

Azhagarsamiyin Kuthiraiடெல்லி: 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை டெல்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இந்த விருதுகளை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அப்புக்குட்டி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றனர்.


அழகர்சாமியின் குதிரை' தமிழ் சினிமாவுக்கு சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்துக்கு தங்கத்தாமரையும், ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த அப்பு குட்டி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார். அவருக்கு வெள்ளி தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.


Appukuttyஅப்புக்குட்டி (Sivabalan)

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

மொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்

*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம்.  *#06 #இந்த குறிய...